அரியலூா் மாவட்டத்தில் கடந்த மாா்ச் 24 முதல் இதுவரையில் ஊரடங்கை மீறிய 1,563 பேரைப் போலீஸாா் கைது செய்துள்ளனா்.
அரியலூா் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றித்திரிந்ததாக (கடந்த 24 முதல் ஏப். 4 ஆம் தேதி வரை)1,563 போ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,1,372 இரு சக்கர வாகனங்கள், 54 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.