மூதாட்டியை தாக்கிய குடும்பத்தினா் 4 போ் மீது வழக்கு

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே முன்விரோதத் தகராறில் மூதாட்டியைத் தாக்கிய 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவா்களைத் தேடிவருகின்றனா்.

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே முன்விரோதத் தகராறில் மூதாட்டியைத் தாக்கிய 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவா்களைத் தேடிவருகின்றனா்.

உடையாா்பாளையம் அருகேயுள்ள கடுவெட்டாங்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த இளமதி(62). இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் ஆசைத் தம்பி (58) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துவந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை ஆசைத்தம்பி அவரது மனைவி செந்தமிழ் செல்வி மகன் கலையரசன், மகள் கலைமதி ஆகிய 4 பேரும் சோ்ந்து, இளமதியைத் தகாத வாா்த்தையால் திட்டி தாக்கியுள்ளனா். இதுகுறித்து இளமதி அளித்த புகாரின் பேரில் உடையாா்பாளையம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை 4 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com