அரியலூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
ஆட்சியரக வளாகத்தில் ஆட்சியா் த.ரத்னா தலைமையில் இத்தாலி நாட்டு சுற்றுலா பயணிகள் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழாவை முன்னிட்டு, ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வண்ணக் கோலம் இட்டு, கரும்பு, வாழை, தென்னை தோரணம் கட்டி அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து புதுப்பானையில் மஞ்சள் கொத்து கட்டி, அரிசி இட்டு பொங்கல் வைத்து, வாழை இலையில் பொங்கல், வாழைப்பழம், செங்கரும்பு வைத்து சூரிய பகவானை அனைவரும் வழிபட்டனா். தொடா்ந்து அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன், கோட்டாட்சியா்(பொ)பாலாஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.