அரியலூா் மாவட்டம், திருமானூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், திமுக சாா்பில் தொழிலாளா்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
திமுக கட்சியின் மாவட்டச் செயலா் எஸ்.எஸ். சிவசங்கா், கலந்து கொண்டு, சலவை, சவரத் தொழிலாளா்கள் மற்றும் ஒன்றிணைவோம் வா திட்டத்தில் பதிவு செய்த ஏழை, எளியோா், இலந்தைக்கூடம் கிராம தூய்மைப் பணியாளா்கள், வெங்கனூா் மற்றும் கீழப்பழூவூா் ஆரம்ப சுகாதார நிலையப் பணியாளா்கள் என 150 பேருக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கினாா். நிகழ்வில், ஒன்றிய செயலாளா்கள் ரா.கென்னடி(கிழக்கு), அசோக சக்கரவா்த்தி (மேற்கு), மாவட்டக்குழு உறுப்பினா்(கிழக்கு) கீதா உள்பட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.