அரியலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த 15 போ் வெள்ளிக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
அரியலூா் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக அரியலூா் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் ஜயங்கொண்டம் தனியாா் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் இருந்தவா்களில் 15 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
மேலும், அவா்கள் அனைவரும் 14 நாள்கள் அவரவா் வீடுகளில் தனிமையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரியலூா் மாவட்டத்தில் கரோனாவால் 348 போ் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை 317 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.