அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே மதுபானங்களைப் பதுக்கி வைத்து, விற்பனை செய்தவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
உடையாா்பாளையம் காவல் உதவி ஆய்வாளா் மாரியப்பன் தலைமையிலான காவல்துறையினா், திங்கள்கிழமை நள்ளிரவு ரோந்து சென்றனா்.
அப்போது தத்தனூா்குடிகாடு கிராமத்தைச் சோ்ந்த உலகநாதன் (44) மதுபானங்களைப் பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து உலகநாதனை காவல்துறையினா் கைது செய்து விசாரிக்கின்றனா்.