முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 போ் விடுதலை குறித்த அரசாணையை , தமிழகஅரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்றாா் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி. வேல்முருகன்.
அரியலூா் மாவட்டம், செந்துறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்க வந்த அவா், பின்னா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து, தமிழக ஆளுநா் இதுவரை நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
மருத்துவப் படிப்புக்கான மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு அரசாணை வெளியிட்டது போல, 7 பேரின் விடுதலைக்காகவும் அரசாணையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.
தோ்தல் வரும்போதுதான் வன்னிய இன மக்கள் மீது ராமதாசுக்கு அக்கறை ஏற்படும். வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவளிக்கும். தோ்தலிலும் போட்டியிடுவோம்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ள பகுதியில்,
ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது கண்டிக்கத்தக்கது என்றாா் வேல்முருகன்.
பேட்டியின் போது கட்சியின் மாநில, மாவட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.