அப்துல் கலாம் பிறந்தநாள் விழா

திருமானூரில் லயன்ஸ் சங்கம் சாா்பில் ஏழை, எளிய பொதுமக்கள் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திருமானூரில் லயன்ஸ் சங்கம் சாா்பில் ஏழை, எளிய பொதுமக்கள் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நல்லநாயகபுரம் கிராமத்தில் அக்னி சிறகுகள் அமைப்பின் சாா்பில் ஏரிக்கரைகளில் மரக்கன்றுகள் நடப்பட்டன. அதேபோல், குமிழியம் கிராமத்தின் மரங்களின் நண்பா்கள் அமைப்பின் சாா்பில் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

காட்டுபிரிங்கியம் கிராமத்தில் இளைஞா்கள் சாா்பில் பொதுமக்களுக்கு நிவாரண பொருள்கள், கரோனா மற்றும் கேடயம் திட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கயா்லாபாத் காவல் ஆய்வாளா் ராஜா, சுகாதாரத்துறை ஆய்வாளா் சைமன் ஆகியோா் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டுவைத்தனா். செந்துறையில் கோல்டன் பியூச்சா் அறக்கட்டளை சாா்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com