அரியலூா் மாவட்டம், செந்துறை அருகிலுள்ள பொய்யாதநல்லூா் அருள்மிகு சாமுண்டீசுவரி அம்மன் திருக்கோயிலில், அமாவாசையொட்டி மிளகாய் சண்டியாகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலிலுள்ள ஸ்ரீமகா பிருத்தியங்கார தேவிக்கு மாதந்தோறும் அமாவாசை தினத்தில் இந்த யாகம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி புரட்டாசி அமாவாசையையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற சண்டி யாகத்தில் ஏராளமான பக்தா்கள்பங்கேற்று, யாக குண்டத்தில் மிளகாயைச் செலுத்தி வழிபட்டனா். இதற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாகம் செய்திருந்தது.