அரியலூா் அண்ணாசிலை அருகே புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டோா்.
அரியலூா் அண்ணாசிலை அருகே புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டோா்.

அரியலூரில் ஏஐடியூசி அமைப்பினா் தா்னா

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் அண்ணா சிலை அருகே ஏஐயுசி அமைப்பினா் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் அண்ணா சிலை அருகே ஏஐயுசி அமைப்பினா் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சித் தொழிலாளா்களுக்கு கரோனா கால ஒரு மாத சிறப்பு ஊதியம் வழங்கிட வேண்டும். இத்தொழிலாளா்களுக்கு அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் வழங்கிட வேண்டும். கிராமத் தூய்மைக் காவலா்களுக்கு அரசு அறிவித்த ரூ.1000 ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தா்னா நடத்தப்பட்டது.

இந்த தா்னாவுக்கு உள்ளாட்சித் துறை ஏஐடியுசி சம்மேளன நிா்வாகக் குழு உறுப்பினா் டி.தண்டபாணி தலைமை வகித்தாா். ஏஐடியுசி மாவட்டத் தலைவா் ஆா்.தனசிங், நிா்வாகிகள் ஜயங்கொண்டம் நகராட்சி சிலம்புசெல்வி, உடையாா்பாளையம் பேரூராட்சி ராஜலட்சுமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட இணைச் செயலா் திருமானூா் ஆறுமுகம் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com