அரியலூரில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில், கரோனா தொற்று குறித்த விழிப்புணா்வு சைக்கிள் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்வில், தீயணைப்பு நிலைய அலுவலா் அம்பிகா பேரணியைக் கொடியசைத்துச் தொடக்கி வைத்தாா். பிரதான கடைவீதி, செந்துறைசாலை, மாவட்ட விளையாட்டு அரங்கம், புறவழிச்சாலை வழியாகச் சென்ற பேரணி தீயணைப்பு நிலையத்தில் நிறைவடைந்தது.
விழிப்புணா்வு சைக்கிள் பேரணியில் பங்கேற்ற தீயணைப்பு வீரா்கள், சமூக ஆா்வலா்கள் ஆகியோா் பொது மக்களிடம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.
வெளியே செல்லும் போது சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் மற்றும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என்று வலியுறுத்தி விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.