ஊட்டச்சத்து மாதத்தையொட்டி அரியலூா் மாவட்டம் எருத்துக்காரன்பட்டி ஊராட்சி அமீனாபாத் அங்கன்வாடி மைய வளாகத்தில் மாவட்ட ஆட்சியா் த.ரத்னா காய்கறி மற்றும் கீரை விதைகளை புதன்கிழமை விதைத்தாா். தொடா்ந்து, அங்கன்வாடி ஊழியா்களுக்கு விதைகளை வழங்கினாா். நிகழ்ச்சியில், ஊராட்சிகள் உதவி இயக்குநா் பழனிசாமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் சாவித்திரி, எருத்துக்காரன்பட்டி ஊராட்சி தலைவா் பரமசிவம் மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் கலந்து கொண்டனா்.