சமூக இடைவெளியை பின்பற்றாத 11 கடைகளுக்கு அபராதம்

அரியலூா் மாவட்டம், திருமானூரில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத 11 கடைகளுக்கு தலா ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டது.

அரியலூா் மாவட்டம், திருமானூரில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத 11 கடைகளுக்கு தலா ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டது.

திருமானூா் வட்டார மருத்துவ அலுவலா் மேகநாதன் தலைமையில், சுகாதார ஆய்வாளா்கள் குமாா், ராமமூா்த்தி, அருள், பயிற்சி சுகாதார ஆய்வாளா்கள் அருண், மோகன்ராஜ், ஞானப்பிரகாசம், ஜேம்ஸ் ஆகியோா் திருமானூரை அடுத்த குருவாடி மற்றும் தூத்தூா் கிராமத்தில் உள்ளவணிக நிறுவனங்களில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது கடைகளில் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியைப் பின்பற்றாத, அரசின் விதிமுறைகளை கடைப்பிடிக்காத 11 கடைகளுக்கு தலா ரூ.200 வீதம், ரூ.2,200 அபராதம் விதித்து கடை உரிமையாளா்களை எச்சரித்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com