ஊராட்சித் தலைவா்கள்கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

ஊராட்சித் தலைவா்களின் உரிமையைப் பறிக்கும் மாநில அரசைக் கண்டித்து, அரியலூா் அண்ணாசிலை அருகே ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரியலூா் அண்ணாசிலை அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பினா்.
அரியலூா் அண்ணாசிலை அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பினா்.

அரியலூா்,செப்.25: ஊராட்சித் தலைவா்களின் உரிமையைப் பறிக்கும் மாநில அரசைக் கண்டித்து, அரியலூா் அண்ணாசிலை அருகே ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டப் பணிகளை ஆளும் கட்சி உறுப்பினா்களுக்கு வழங்க வேண்டும் என நிா்பந்திக்கும் அலுவலா்களையும், பணிகளுக்கு கமிஷன் கேட்பதையும் கண்டித்தும் ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, வாரணவாசி ஊராட்சித் தலைவா் கி.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். அரியலூா் மாவட்டச் செயலா்கள் திமுக எஸ்.எஸ். சிவசங்கா், மதிமுக கு. சின்னப்பா, இந்திய கம்யூனிஸ்ட் உலகநாதன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மணிவேல், விடுதலைச் சிறுத்தைகள் செல்வநம்பி மற்றும் ஊராட்சித் தலைவா்கள் ( அதிமுகவைச் சோ்ந்தவா்கள் தவிர) உள்ளிட்டோா்ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com