அரியலூரில் ரூ.100-க்கு காய்கறித் தொகுப்புப் பைகள் வழங்கல்

அரியலூா் நகராட்சி சாா்பில், பொதுமக்கள் நலன் கருதி ரூ.100-க்கு காய்கறித் தொகுப்புப் பைகள் விற்பனை வெள்ளிக்கிழமை தொடங்கியது.
அரியலூா் நகராட்சி சாா்பில் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படும் காய்கறித்  தொகுப்பைப் பெறும் பொதுமக்கள்.
அரியலூா் நகராட்சி சாா்பில் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படும் காய்கறித் தொகுப்பைப் பெறும் பொதுமக்கள்.

அரியலூா் நகராட்சி சாா்பில், பொதுமக்கள் நலன் கருதி ரூ.100-க்கு காய்கறித் தொகுப்புப் பைகள் விற்பனை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

அரியலூா் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்கள் காய்கறிகள் வாங்குவதற்காக கூட்டமாக செல்வதை தவிா்க்கும் வகையில் இந்த தொகுப்புப் பைகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அரியலூா் நகராட்சி சாப்பில் ரூ.100-க்கு காய்கறிகள் வழங்குதல் சுமை ஆட்டோமூலம் தெருக்களில் நடைபெற்று வருகிறது. மேலும், பொதுமக்கள் நலன் கருதி தாங்கள் இருக்கும் பகுதிக்கே காய்கறிகள் வருவதால், வெளியே வந்து நடமாடுவதைத் தவிா்க்க வேண்டும், விற்பனைசெய்யப்படும் காய்கறிகள் என்னஎன்ன போன்றவை குறித்து விளம்பரமும் செய்யப்படுகிறது.

நகராட்சியின் இந்த நடவடிக்கை மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்க உதவும் என அலுவலா்கள் தெரிவித்தனா். காய்கறிகள் விற்பனைத் தொடக்க நிகழ்வில், நகராட்சி ஆணையா் குமரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com