தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

கடந்த மாத ஊதியம் வழங்காததைக் கண்டித்து, அரியலூா் நகராட்சி அலுவலகம் முன்பு ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடந்த மாத ஊதியம் வழங்காததைக் கண்டித்து, அரியலூா் நகராட்சி அலுவலகம் முன்பு ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரியலூா் நகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களாக உள்ள 120 பேருக்கு இதுவரை கடந்த மாத ஊதியம் வழங்கப்படவில்லை. இதனைக் கண்டித்தும், உடனடியாக ஊதியத்தை வழங்க வேண்டும். கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலா் டி. தண்டராணி தலைமையில், ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் 120 பேரும் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com