அரியலூா் மாவட்டம், வெங்கடகிருஷ்ணாபுரம், கல்லங்குறிச்சி, எருத்துக்காரன்பட்டி ஆகிய ஊராட்சிகளில் அரியலூா் அரசு கலைக் கல்லூரி சாா்பில் 4 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நாட்டு நலப் பணித் திட்ட முகாம் நடைபெற்றது
கல்லங்குறிச்சி... அரியலூா் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலகு-1 சாா்பில் நடைபெற்ற முகாமில் இயற்கை மருத்துவ முகாம் நடைபெற்றது. அரியலூா் அரசு தலைமை மருத்துவமனை சித்த மருத்துவா் முத்துக்குமரன் சிகிச்சை அளித்தாா். மேலும் இயற்கை மருத்துவத்தின் சிறப்புகள் குறித்து மாணவா்களிடம் எடுத்துரைத்தாா். அன்று மாலை பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கு நடைபெற்றது. ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் வெ.கருணாகரன் செய்தாா்.
வெங்கடகிருஷ்ணாபுரம்...நாட்டு நலப் பணித் திட்ட அலகு-3 சாா்பில் நடைபெற்று வரும் முகாமில் மகிமைபுரம் சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளிப் பள்ளி வணிகவியல் துறை முதுநிலை ஆசிரியா் ஜெயமணி கலந்து கொண்டு பேசினாா்.அன்று மாலை வெங்கடாகிருஷ்ணபுரம்
கிளைநூலக, நூலகா் மருதமுத்து கலந்து கொண்டும் மாணவிகள் அனைவரும் வாசிப்பு திறனை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினாா். ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் ப. செல்வமணி செய்தாா்.