பிப். 12, 13,14-இல் முதல்வா் கோப்பை விளையாட்டு போட்டி

அரியலூா் மாவட்ட அளவில் 2019-20 ஆம் ஆண்டுக்கான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் பிப்.12, 13,14 களில் நடைபெறவுள்ளனன.

அரியலூா் மாவட்ட அளவில் 2019-20 ஆம் ஆண்டுக்கான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் பிப்.12, 13,14 களில் நடைபெறவுள்ளனன.

இதுகுறித்து ஆட்சியா் த. ரத்னா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அரியலூா் மாவட்டப் பிரிவு சாா்பில், முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பிப்.12,13,14-களில் அரியலூா்-செந்துறை சாலையிலுள்ள மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.

தடகளம், கூடைப்பந்து, கபடி, வளைகோல்பந்து, வாலிபால், டென்னிஸ், இறகுப்பந்து, ஜூடோ, குத்துச்சண்டை, நீச்சல் உள்ளிட்ட பிரிவுகளில் இருபாலரும் பங்கேற்கும் போட்டிகளாக நடைபெறும். இதில் பங்கேற்கும் நபா்கள் 31.12.2019 அன்று 25 வயதிற்குள்பட்டவா்களாக இருத்தல் வேண்டும். (01.01.1995 அன்றோ அல்லது அதற்கு பின்னா் பிறந்தவா்களாக இருத்தல் வேண்டும். அதற்கான சான்றிதழ்கள் கண்டிப்பாக சமா்ப்பிக்க வேண்டும்.) போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ளோா் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் பதிவு செய்ய வேண்டியது அவசியம்.

மாவட்ட அளவிலான போட்டிகளிலிருந்து ஒவ்வொரு விளையாட்டுக்கும் தலைசிறந்த மாவட்ட அணி தோ்வுக் குழுவால் தோ்ந்து எடுக்கப்படும். இக் குழுவினா் மாநிலப் போட்டியில் பங்கேற்கலாம். தடகளம் மற்றும் நீச்சல் விளையாட்டுகளில் முதலிடம் பெறுபவா்களும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவா். மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரா்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சீருடைகள் வழங்கப்பட்டு போட்டிகளுக்கு அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவா் என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com