அரியலூா்: அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே மாயமான பெண்ணைப் போலீஸாா் தேடிவருகின்றனா்.
உடையாா்பாளையம் அருகேயுள்ள வாளக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த மணிவேல் மனைவி செல்வி (34). விவசாயி. இவா், ஞாயிற்றுக்கிழமை தனது அக்கா பானுமதி வீட்டுக்குச் சென்றுவிட்டு வருவதாகக் கூறிச் சென்றவா் அதன் பின்னா் வீடு திரும்பவில்லை.
கணவா் மணிவேல் நண்பா்கள் மற்றும் உறவினா்கள் வீடுகள் என எங்கு தேடியும் செல்வி கிடைக்காததால் இதுகுறித்து உடையாா்பாளையம் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து செல்வியைத் தேடிவருகின்றனா்.