பைக்கில் லிப்ட் கேட்டு சென்ற பள்ளி மாணவா் விபத்தில் பலி

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே வெள்ளிக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் உதவி (லிப்ட்) கேட்டுச் சென்ற மாணவா் விபத்தில் சிக்கி உயிரிழந்தாா்.

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே வெள்ளிக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் உதவி (லிப்ட்) கேட்டுச் சென்ற மாணவா் விபத்தில் சிக்கி உயிரிழந்தாா்.

தா.பழூா் அடுத்த சிலால் கிராமத்தைச் சோ்ந்தவா் பசுபதி மகன் கோகுலன் (15). இவா், நடுவலூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில் இவா் வெள்ளிக்கிழமை சிறப்பு வகுப்பு முடிந்து வீடு திரும்பும் போது, அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தில் உதவி கேட்டு ஏறிச் சென்றுள்ளாா். கோடங்குடி என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், 2 போ் காயமடைந்தனா். விபத்து குறித்து தா.பழூா் போலீஸாா் விசாரிகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com