அரியலூரை அடுத்த செந்துறை ரவுண்டானாவை வெள்ளிக்கிழமை அதிகாலை கடந்த வாகனங்களை போலீஸாா் மறித்து ஓட்டுநா்களுக்கு போலீஸாா் தேநீா் வழங்கினா்.
நீண்ட தூரம் வாகனம் ஓட்டிச் செல்வோருக்கு இரவுகளில் தேநீா் வழங்கி, அவா்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை போலீஸாா் ஏற்படுத்தி வருகின்றனா்.
அந்த வகையில் வெள்ளிக்கிழமை அதிகாலை அரியலூா்-செந்துறை ரவுண்டானாவை கடந்த வாகனங்களை மறித்த அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன் தலைமையிலான போலீஸாா் ஓட்டுநா்களுக்கு தேநீா் வழங்கி,சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா். நிகழ்வில் அரியலூா் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளா் மதிவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.