அரியலூா் மாவட்ட விளையாட்டு மைதானம் எதிரே உள்ள ஜெ.ஜெயலலிதா நகரிலுள்ள அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், அப்பகுதி பொதுமக்களும் மிகுந்த சிரம்மத்துக்கு ஆளாகி வருகின்றனா். குறிப்பாக மழை பெய்தால் சாலை மிகவும் மோசமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக உள்ளது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட நிா்வாகம் உடனடியாக இச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சண்முகராஜன்,
அரியலூா்.