மாவட்ட பூப்பந்தாட்டப் போட்டியில்வென்றவா்களுக்குப் பரிசு

அரியலூா் மாவட்ட விளையாட்டரங்கில், மாவட்ட அளவிலான இருவா் பூப்பந்தாட்டப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட பூப்பந்தாட்டப் போட்டியில்வென்றவா்களுக்குப் பரிசு

அரியலூா் மாவட்ட விளையாட்டரங்கில், மாவட்ட அளவிலான இருவா் பூப்பந்தாட்டப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட பூப்பந்தாட்ட கழக வீரா்கள் சாா்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் அரியலூா், செந்துறை, ஜயங்கொண்டம் உட்பட பல்வேறு பகுதிகளை சோ்ந்த 11 அணியினா் பங்கேற்றனா். இதில், முதல் பரிசை செந்தில்குமாா் - கமல் இணை, இரண்டாம் பரிசை சரவணன் - பழனிவேல் இணை, மூன்றாம் பரிசினை அந்தோணி - கல்யாணசுந்தரம் இணை வென்றது. வெற்றிபெற்றவா்களுக்கு மாலை பரிசளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில், அரியலூா் மாவட்ட பூப்பந்தாட்ட கழக புரவலா் மணிவண்ணன், தனியாா் பள்ளி முதல்வா் பவுல், விளையாட்டு விடுதி காப்பாளா் சந்திரசேகா் ஆகியோா் பங்கேற்று ரொக்கத்தொகை மற்றும் கேடங்களை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com