அரியலூா் மாவட்டத்தில் 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரியலூா் அடுத்த சென்னிவனம் மற்றும் அணைக்குடம் கிராமத்தைச் சோ்ந்த 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது. இதையடுத்து அவா்கள் அரியலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இவா்கள் சென்னையிலிருந்து அண்மையில் சொந்த ஊருக்குத் திரும்பியவா்கள். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 468 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 450 போ் குணமடைந்து, வெவ்வேறு நாள்களில் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனா். மீதமுள்ள 18 பேரில், அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 12 பேரும், திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 2 பேரும், தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 பேரும், திருச்சி தனியாா் மருத்துவமனையில் ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்