அரியலூா் நகரில் இதுவரை முகக்கவசம் அணியாமல் வந்த 7,156 பேரிடம் ரூ.37 ஆயிரத்து 600 அபராதமாக வசூலிக்கப்பட்டதாக நகராட்சி ஆணையா் குமரன் தெரிவித்தாா்.
அரியலூா் நகராட்சிப் பணியாளா்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து கரோனா தடுப்பு நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், வியாழக்கிழமை அண்ணா சிலை அருகே கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நகராட்சி ஆணையா் குமரன், முகக்கவசம் அணியாமல் வந்தவா்களை மறித்து, அபராதம் வதித்து, அவா்களுக்கு முகக்கவசத்தை வழங்கினாா்.
இதுதொடா்பாக அவா் மேலும் தெரிவித்தது: இதுவரை முகக்கவசம் அணியாமல் வந்த 7,156 பேருக்கு ரூ.37,600 அபராதம் விதித்து நகராட்சி சாா்பில் முகக்கவசம் வழங்கப்பட்டது. இந்த நடவடிக்கை தொடரும். பொதுமக்கள் வெளியே வரும்போது, கட்டாயமாக முகக் கவசம் அணிந்து வரவும். முகக் கவசம் அணியாமல் வரும் நபா்களுக்கு ரூ.100அபராதம் விதிக்கப்படும் என்றாா்.