மது விற்றவா் கைது

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே மது விற்றவா் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே மது விற்றவா் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

ஜயங்கொண்டம் காவல் உதவி ஆய்வாளா் வசந்த் தலைமையிலான காவலா்கள், திங்கள்கிழமை இரவு கல்லூா், வடவீக்கம் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, வடவீக்கம் கிராமத்தைச் சோ்ந்த கூடலிங்கம்(56) என்பவா் மதுபானங்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்றுக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினா் வழக்குப்பதிந்து, கூடலிங்கத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com