சிட்டுக்குருவி தினத்தையொட்டி அவைகளுக்கு அட்டை பெட்டிகள் மற்றும் பானைகளில் இருப்பிடம் உருவாக்கி மரங்களில் இளைஞா்கள் வெள்ளிக்கிழமை தொங்கவிட்டனா்.
அரியலூா் மாவட்டம், குமிழியம் கிராமத்தில் மரங்களின் நண்பா்கள் அமைப்பின் சாா்பில், சிட்டுக்குருவி தினத்தையொட்டி இளைஞா்கள் மற்றும் மாணவா்களுடன் இணைந்து சிட்டுக்குருவிகள் தங்கும் வகையில் அட்டைபெட்டிகள் மற்றும் பானைகளில் ஏராளமான வீடுகளை செய்து மரங்களில் கட்டி தொங்க விட்டனா். இதனால், சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், அழிவிலிருந்து காப்பாற்ற முடியும் என்றும் மரங்களின் நண்பா்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ஆசிரியா் முத்துக்கிருஷ்ணன் தெரிவித்தாா்.