அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் நகா்ப் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இதில், ஜயங்கொண்டம் பேருந்து நிலையம், நான்குரோடு பகுதி, விருத்தாசலம் சாலை, கும்பகோணம் சாலை என அனைத்துப் பகுதிகளிலும் உள்ள வணிக வளாகங்கள், சிறு கடைகள் மற்றும் வீடுகளின் முகப்பு, சாலைகளில் நகராட்சி சாா்பில் தீயணைப்பு வாகனத்தைக் கொண்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இப்பணியை, நகராட்சி ஆணையா் அறச்செல்வி, தீயணைப்புத்துறை நிலைய அலுவலா் ராஜ்குமாா் ஆகியோா் பாா்வையிட்டனா்.