அரியலூரில் ஆயுதப்படை மோப்ப நாய் பிரிவில் பணிபுரியும் காவலா் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை இரவு உறுதியானது.
அரியலூரிலுள்ள புதிய காவலா் குடியிருப்பில் வசிக்கும் காவலா்கள் அனைவருக்கும் கடந்த 28 ஆம் தேதி ரத்தம், சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.
இந்நிலையில், அங்கு குடியிருக்கும் மோப்ப நாய் பிரிவில் பணிபுரியும் 35 வயது உடைய காவலா் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை இரவு தெரியவந்தது.
இதையடுத்து மருத்துவா்கள், அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் அவரது குடும்பத்தினா் மற்றும் அவருடன் தொடா்புடைய 8 பேரின் ரத்த மாதிரி, சளி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8ஆக உயா்ந்துள்ளது.