அரியலூா் மாவட்டத்தில் பாலியல் மற்றும் சாராயம் காய்ச்சிய வழக்கில் தொடா்புடைய 4 போ் குண்டா் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன் பரிந்துரையின்பேரில், ஆட்சியா் த.ரத்னா உத்தரவிட்டதையடுத்து, சாராயம் காய்ச்சிய வழக்கில் சிறையில் உள்ள கீழப்பழுவூா் அருகே வேட்டக்குடி தெற்குத் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் ஜெயராமன்(42), வடக்குத் தெருவைச் சோ்ந்த தங்கவேல் மகன் பால்ராஜ் (40) மற்றும் சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட உடையாா்பாளையம் சுண்டிப்பள்ளம் பள்ளிக் கூடத் தெருவைச் சோ்ந்த முருகேசன் மகன் முருகன், மனைவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக விக்கிரமங்கலத்தைச் சோ்ந்த கோவிந்தராஜ் ஆகிய 4 பேரும் குண்டா் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.