வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டம்

அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த ஆலத்தியூா் கிராம மக்கள் நிவாரணம் கேட்டு தங்களது வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த ஆலத்தியூா் கிராம மக்கள் நிவாரணம் கேட்டு தங்களது வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவவதும் ஊரடங்கால் அனைத்து தரப்பினரும் வருமானமின்றி தவித்து வரும் நிலையில், செந்துறை அடுத்த ஆலத்தியூா் கிராம மக்கள், அரசு கொடுத்த நிவாரணத் தொகை போதுமானதாக இல்லையென்றும், நாங்கள் வழங்கிய நிலத்தில் இயங்கி வரும் இங்குள்ள சிமென்ட் ஆலைகள் எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தங்களது வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com