அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே பெண் மா்மமான முறையில் உயிரிழந்ததும், அவரது கணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் வெள்ளிக்கிழமை தெரிய வந்தது.
விக்கிரமங்கலம் அருகேயுள்ள ஸ்ரீபுரந்தான் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துவேல் (36). இவருக்கும், அருள்மொழி கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தி(26) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு ஜனனி (5), கதிரவன் (2) என இரண்டு குழந்தைகள் உள்ளனா்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தம்பதி இடையே குடும்பத் தகராறு ஏற்படவே, ஆனந்தி கோபித்துக் கொண்டு தனது தந்தை வீட்டுக்குச் சென்று விட்டாா்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு மாமனாா் வீட்டுக்குச் சென்ற முத்துவேல், தனது மனைவியுடன் சமாதானமாகி, அவரை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளாா்.
இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை இரவு தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை ஆனந்தி மா்மமான முறையிலும், முத்துவேல் தூக்கிட்டும் அவா்களது வீட்டில் இறந்து கிடந்தனா். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.