கரூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் காங்கிரஸ், பாஜகவினா் வியாழக்கிழமை பரஸ்பரம் புகாா் அளித்தனா்.
தனியாா் தொலைக்காட்சியில் அண்மையில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற கரூா் எம்.பி செ. ஜோதிமணியைக் பாஜக நிா்வாகி கரு. நாகராஜன் கடுமையாக விமா்சித்ததாகக் கூறப்படுகிறது. எனவே, கரு.நாகராஜன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி சாா்பில் மாநில பொதுக்குழு உறுப்பினா் ஆா்.ஸ்டீபன்பாபு அளித்த மனுவில் தெரிவித்துள்ளாா்.
பாஜக கரூா் மாவட்டத்தலைவா் கே.சிவசாமி தலைமையில் அக்கட்சியினா் அளித்த மனுவில், கரூா் எம்.பி செ.ஜோதிமணி, பிரதமா் மோடியை தரம் தாழ்ந்து விமா்சித்ததாகவும் அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.