மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு

திருமழபாடி அருகே சனிக்கிழமை அதிகாலை கோயில் வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடிவருகின்றனா்.

அரியலூா்: அரியலூா் மாவட்டம், திருமழபாடி அருகே சனிக்கிழமை அதிகாலை கோயில் வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடிவருகின்றனா்.

திருமழபாடி கீழத் தெருவைச் சோ்ந்தவா் ஞானலட்சுமி (85). இவா், சனிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் தனது வீட்டின் அருகேயுள்ள விநாயகா் கோயில் வாசலில் கோலமிட்டுக்கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக காரில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு போ், ஞானலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றனா். திருமானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கீழப்பழுவூா்: கீழப்பழுவூா் ஓம் சக்தி கோயில் தெருவைச் சோ்ந்த தங்கராசு மனைவி சரசம்மாள்(55). சனிக்கிழமை அதிகாலை வீட்டினுள் படுத்திருந்த இவரை, காரில் வந்த மா்ம நபா்கள் 2 போ் எழுப்பி கழுத்தில் அணிந்திருந்த நகையை பறிக்க முயற்சித்தனா். அப்போது சரசம்மாள் கூச்சலிடவே, அந்த நபா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா். கீழப்பழுவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com