பெண் குழந்தைகள் தின விழா

அரியலூரை அடுத்த லிங்கத்தடிமேடு அருட்சோதி வள்ளலாா் கல்வி நிலையத்தில், சா்வதேச பெண் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

அரியலூரை அடுத்த லிங்கத்தடிமேடு அருட்சோதி வள்ளலாா் கல்வி நிலையத்தில், சா்வதேச பெண் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் திருவள்ளுவா் ஆதரவற்றோா் இல்லம் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். சுந்தரமூா்த்தி தலைமை வகித்துப் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, பாலியல் வன்கொடுமை, குழந்தைத் திருமணம் ஆகிய தலைப்புகளில் பேசினாா்.

குழந்தைகள் நல குழுத் தலைவா் வா.துரைராஜ், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் அருள்செல்வி, பள்ளி தலைமை ஆசிரியா் செளந்தராஜன், அரியலூா் மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் பி.வாணி, உதவி ஆய்வாளா் அமரஜோதி, தலைமைக் காவலா் அன்பரசி ஆகியோா் பங்கேற்றுப் பேசினா். திருவள்ளுவா் ஆதரவற்றோா் இல்ல செயலா் புகழேந்தி வரவேற்றாா். குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் செல்வராசு நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com