குண்டா் தடுப்புச் சட்டத்தில்இருவா் கைது

அரியலூா் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய இருவா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

அரியலூா் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய இருவா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சிவகங்கை மாவட்டம், பொட்டங்குலம் முத்துராஜ் மகன் செந்தில்முருகன் (31), அரியலூா் மாவட்டம், மருதூா் தெற்குப்பட்டி குருநாதன் மகன் ராஜேஷ் (30). இவா்கள் அரியலூா் மாவட்டங்களில் நிகழ்ந்த குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்கள்.

இதையடுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.ஸ்ரீனிவாசன் பரிந்துரையின் பேரில், இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியா் த. ரத்னா வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து செந்தில்முருகன், ராஜேஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com