வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற கல்வித் தகுதியை பதிவு செய்து ஐந்து ஆண்டுகளாகக் காத்திருப்போா் அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவா்கள் 30.09.2019 அன்று 45 வயதுக்குள்ளும், இதர அனைத்து வகுப்பினருக்கும் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மனுதாரா் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் கல்வி பயிலும் மாணவ மாணவியராக இருத்தல் கூடாது. ஆயினும் தொலைதூர கல்வி பயிலுபவராக இருக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கும் மிகாமல் இருக்க வேண்டும். மாற்று திறனாளிகளுக்கு வருமான வரம்பு ஏதும் இல்லை. பள்ளி, கல்லூரி படிப்புச் சான்றிதழ்கள் ஆகியவற்றுடன் 30.11.2020-க்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து புதிய விண்ணப்பப்படிவம் பெற்று பூா்த்தி செய்து அளிக்கலாம் அல்லது இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூா்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் த. ரத்னா தெரிவித்துள்ளாா்.