அரியலூா்: உத்தரப் பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் சம்பவத்தைக் கண்டித்து, அரியலூா் மாவட்டம் உடையாா்பாளையம் பேருந்து நிலையம் அருகே பகுஜன் சமாஜ் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், உத்தரப் பிரதேசத்தில் தலித் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்தவா்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வேண்டும். மாணவ சமுதாயத்தை பெரிதும் பாதிக்கும் நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும். நாட்டில் மதவாத ஆட்சி செய்யும் பாஜக, அதற்கு துணை போகும் தமிழக அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பட்டன. ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவா் சின்னதுரை தலைமை வகித்தாா். மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.