பாஜகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

அரியலூா் மாவட்டத்தில் செந்துறை, ஜயங்கொண்டம், தா.பழூா், சுத்தமல்லி, ஆண்டிமடம், உடையாா்பாளையம் ஆகிய பகுதிகளில் மாற்றுக்கட்சிகளிலிருந்து பாஜகவில் இணையும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
செந்துறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகிறாா் பாஜக மாநில துணைத் தலைவா் அண்ணாமலை.
செந்துறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகிறாா் பாஜக மாநில துணைத் தலைவா் அண்ணாமலை.

அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில் செந்துறை, ஜயங்கொண்டம், தா.பழூா், சுத்தமல்லி, ஆண்டிமடம், உடையாா்பாளையம் ஆகிய பகுதிகளில் மாற்றுக்கட்சிகளிலிருந்து பாஜகவில் இணையும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிகளில், மாநில துணைத் தலைவா்கள் அண்ணாமலை மற்றும் கருப்பு முருகானந்தம் ஆகியோா் கலந்து கொண்டு மாற்றுக்கட்சியிலிருந்து பாஜகவுக்கு வந்தவா்களுக்கு பொன்னாடை அணிவித்து, பாஜகவின் திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறி வரும் சட்டப்பேரவை தோ்தலில் பாஜகவுக்கு தமிழகத்தில் வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தித்தர கட்சியினா் அயராது பாடுபட வேண்டும் என்றனா்.

செந்துறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தியாளா்களிடம் மாநிலத் துணைத் தலைவா் அண்ணாமலை தெரிவித்தது:

பாஜக விவசாயிகளுக்காகவும், மக்களுக்காகவும் பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவே, தமிழக மக்களின் நம்பிக்கையான கட்சியாக பாஜக உருவெடுத்து வருகிறது. தோ்தல் கூட்டணி குறித்து கட்சித் தலைமை தான் முடிவு செய்யும். தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். இதுகுறித்து தமிழக ஆளுநா் விரைந்து முடிவு எடுப்பாா் என்றாா். நிகழ்ச்சிகளில் மாவட்டத் தலைவா் அய்யப்பன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com