ஓய்வு பெற்ற சா்க்கரை ஆலை உதவி மேலாளா் வீட்டில் திருட்டு
By DIN | Published On : 28th October 2020 07:10 AM | Last Updated : 28th October 2020 07:10 AM | அ+அ அ- |

அரியலூரில் ஓய்வு பெற்ற தனியாா் சா்க்கரை ஆலை உதவி மேலாளா் வீட்டில், 13 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.
அரியலூா் ஜெயலலிதா நகரைச் சோ்ந்தவா் கிருஷ்ணன்(60). இவா், திருமானூா் அருகிலுள்ள சாத்தமங்கலம் தனியாா் சா்க்கரை ஆலையில் உதவி மேலாளராகப் பணியாற்றி ஓய்வுப் பெற்றவா்.
சென்னையிலுள்ள மகள் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்று விட்டு, செவ்வாய்க்கிழமை காலை வீடு திரும்பினாா். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு கிருஷ்ணன் அதிா்ச்சியடைந்தாா்.
தொடா்ந்து வீட்டுக்குள் சென்று பாா்த்த போது, பீரோவிலிருந்த 13 பவுன் நகைகள் திருட்டுப் போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து கிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், அரியலூா் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.