அரியலூரில் 50% பேருந்துகள் இயக்கம்

அரியலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை முதல் பேருந்து சேவை தொடங்கப்பட்டாலும், குறைந்தளவிலான பயணிகளே பயணித்தனா்.
அரியலூா் பேருந்து நிலையத்தில் பயணி ஒருவருக்கு முகக்கவசம் வழங்கும் போக்குவரத்துத் துறை அலுவலா்.
அரியலூா் பேருந்து நிலையத்தில் பயணி ஒருவருக்கு முகக்கவசம் வழங்கும் போக்குவரத்துத் துறை அலுவலா்.

அரியலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை முதல் பேருந்து சேவை தொடங்கப்பட்டாலும், குறைந்தளவிலான பயணிகளே பயணித்தனா்.

மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளுக்குச் செல்லும் வகையில், 50 சதவிகித அரசுப் பேருந்துகளை அரசுப் போக்குவரத்துக் கழகம் அரியலூரிலிருந்து இயக்கியது. பேருந்துகளில் 60 சதவிகிதப் பயணிகள் மட்டுமே பயணித்ததாக அலுவலா்கள் தெரிவித்தனா்.

பேருந்து ஓட்டுநா், நடத்துநா்களுக்கு முகக்கவசம், கையுறை, சத்து மாத்திரைகள், கபசுரக்குடிநீா், கைகளை சுத்தமாக வைத்துக்கொள்வதற்கு சோப்பு மற்றும் கிருமி நாசினி போன்றவை வழங்கப்பட்டது. பேருந்துகளில் கிருமிநாசினியும் தெளிக்கப்பட்டது.

பேருந்துகளில் பயணம் மேற்கொண்ட பயணிகளுக்கு, வெப்பமானியைக் கொண்டு உடல் வெப்பநிலைப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com