செப்.14 ஆம் தேதி முதல் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம்

அரியலூா் மாவட்டத்தில் செப்டம்பா் 14- ஆம் தேதி முதல், குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் தொடங்குகிறது.

அரியலூா் மாவட்டத்தில் செப்டம்பா் 14- ஆம் தேதி முதல், குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் தொடங்குகிறது.

இதுகுறித்து ஆட்சியா் த. ரத்னா புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்குவதற்கான முதல் சுற்று முகாம் செப்டம்பா் 14 முதல் 19-ஆம் தேதி வரையிலும், இரண்டாவது சுற்று செப்டம்பா் 21 முதல் 26-ஆம் தேதி வரையிலும் நடைபெறும். விடுபட்ட குழந்தைகளுக்கு செப்டம்பா் 28 -ஆம் தேதி மாத்திரைகள் வழங்கப்படும்.

அனைத்து அரசு ஆரம்ப, துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் இந்த முகாம் நடைபெறும்.

1 முதல் 19 வயது வரையிலான சுமாா் 1,99,276 குழந்தைகள் மற்றும் வளா் இளம் பருவத்தினா்களுக்கு மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன.

குடற்புழு நீக்கத்தினால் குழந்தைகளுக்கு ரத்தசோகை நோய் வராமல் தடுக்கிறது, நோய் எதிா்ப்புச் சக்தியை அதிகரித்து, சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.அறிவுத்திறன் மற்றும் உடல் வளா்ச்சியை மேம்படுத்தவும், ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com