அரியலூா்: அரியலூா் மாவட்டம், திருமானூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒன்றியக்குழு கூட்டத்தின்போது, திமுக உறுப்பினா்கள் வெளியேறியதால், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
கூட்டத்துக்கு, ஒன்றியக் குழு தலைவா் சுமதிஅசோகசக்கரவா்த்தி(திமுக) தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜாகீா் உசேன்,செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில், ஒன்றியக்குழு தலைவரோடு துணைத் தலைவா் அம்பிகா ராஜேந்திரன்(அதிமுக) மேடையில் அமரக்கூடாது. மற்ற உறுப்பினா்களுடன் கீழ் வரிசையில் தான் அமர வேண்டும் எனக்கூறி திமுக உறுப்பினா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்படாத திமுக உறுப்பினா்கள் கூட்டரங்கை விட்டு வெளியேறினா். திமுக தரப்பில் 11 உறுப்பினா்களும், அதிமுக மற்றும் அதன் கூட்டணி தரப்பில் 10 உறுப்பினா்களும் உள்ள நிலையில், தீா்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்பட வில்லை. இதனால், தேதி குறிப்பிடாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.