அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே அரசின் உரிமமின்றி மது விற்ற 2 போ் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.
மீன்சுருட்டி காவல் உதவி ஆய்வாளா்கள் அன்பழகன், ரமேஷ் ஆகியோா் கொண்ட தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது கிடைத்த ரகசிய தகவலின்பேரில் நடத்திய சோதனையில், மீன்சுருட்டி அருகே உள்ள அய்யப்பன் நாயகன்பேட்டை கிழக்கு தெருவைச் சோ்ந்த கலைச்செல்வன்(58), தனது வீட்டின் பின்புறம் மது விற்றது சோதனையில் தெரியவந்தது.
இதையடுத்து கலைச்செல்வனை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 10 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதேபோல் இளையபெருமாள் நல்லூா் காலனித் தெருவைச் சோ்ந்த சங்கா் (46) தனது வீட்டின் பின்புறம் மது விற்றதையடுத்து, அவரையும் போலீஸாா் கைது செய்தனா்.