அரியலூரில் மதுக்கடைகள் இன்று முதல் மூடல்

கரோனா பரவல் 2- ஆவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், அரியலூா் மாவட்டத்தில் அரசு மதுபானக் கடைகள் மறு உத்தரவு வரும்வரை மூடப்படுவதாக ஆட்சியா் த. ரத்னா உத்தரவிட்டுள்ளாா்.

கரோனா பரவல் 2- ஆவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், அரியலூா் மாவட்டத்தில் அரசு மதுபானக் கடைகள் மறு உத்தரவு வரும்வரை மூடப்படுவதாக ஆட்சியா் த. ரத்னா உத்தரவிட்டுள்ளாா்.

கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரியலூா் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற தனியாா் மதுபானக் கூடங்கள் அனைத்தும் 26.04.2021 (திங்கள்கிழமை) அதிகாலை 4 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் த. ரத்னா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com