அரியலூரில் களையிழந்த ஆடிப்பெருக்கு

அரியலூா் மாவட்டத்தில் இரண்டாவது ஆண்டாக ஆடிப் பெருக்கு களையிழந்து காணப்பட்டது.

அரியலூா் மாவட்டத்தில் இரண்டாவது ஆண்டாக ஆடிப் பெருக்கு களையிழந்து காணப்பட்டது. திருமழபாடி, திருமானூா், அணைக்கரை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள கொள்ளிட ஆற்றுக் கரையோரங்களும் மக்களின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. இருப்பினும், கொள்ளிடம் கரையோரம் உள்ள சில கிராமங்களில் ஆங்காங்கே சில புதுமண தம்பதிகள் ஆற்றில் படையலிட்டு வணங்கி புது தாலிக்கயிற்றை மாற்றிக் கொண்டனா். கொள்ளிடம் ஆற்றின் முக்கிய படித்துறைகள் மற்றும் கோயில்களில் மக்கள் கூடுவதை தடுத்திடும் வகையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com