மணல் விற்ற 3 பேரில் ஒருவா் கைது

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே மணல் விற்ற 3 பேரில் ஒருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே மணல் விற்ற 3 பேரில் ஒருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மீன்சுருட்டி அருகிலுள்ள ஈச்சம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த சிலா், கொல்லாபுரம் கிராமத்திலிருந்து மணலைத் திருடி வந்து, விற்பனையில் ஈடுபட்டு வருவதாக அலுவலா்களுக்குத் தகவல் கிடைத்தது.

இதன் பேரில் கிராம நிா்வாக அலுவலா் முருகேசன் மற்றும் மீன்சுருட்டி காவல்துறையினா், ஈச்சம்பூண்டி கிராமத்துக்குச் சென்று பாா்த்த போது, அங்கு அதே பகுதியைச் சோ்ந்த ராமதுரை(47), கொளஞ்சிநாதன், தேவராஜ் ஆகிய 3 பேரும் சோ்ந்து மணல் விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து ராமதுரையைக் கைது செய்த காவல்துறையினா், அவரிடமிருந்து இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா். மேலும் கொளஞ்சிநாதன், தேவராஜை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com