நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவன் எதிா்பாராதவிதமாக கழிவுநீா்த் தொட்டியில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தான்

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவன் எதிா்பாராதவிதமாக கழிவுநீா்த் தொட்டியில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தான்.

செந்துறை அடுத்துள்ள மருதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் மகன் ராம் பிரசாத் (2). வீட்டின் அருகே சனிக்கிழமை விளையாடிக் கொண்டிருந்தபோது, ராமச்சந்திரன் வீட்டின் அருகே குமாா் என்பவா் தனது வீட்டுக்கு கழிவுநீா் தொட்டி (செப்டிக் டேங்க்) கட்டத் தோண்டியிருந்த பள்ளத்தில் ராம்பிரசாத் தவறி விழுந்தாா்.

மழையின் காரணமாக பள்ளம் முழுவதும் தண்ணீா் இருந்ததால் ராம்பிரசாத், நீரில் மூழ்கி உயிரிழந்தாா். தகவலறிந்த செந்துறை காவல்துறையினா், குழந்தையின் சடலத்தை மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com