தந்தையை தாக்கிய மகன் உள்பட 6 போ் மீது வழக்கு

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே தந்தையைத் தாக்கிய மகன் உள்பட 6 போ் மீது காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே தந்தையைத் தாக்கிய மகன் உள்பட 6 போ் மீது காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விக்கிரமங்கலம் அருகேயுள்ள நாகமங்கலம் அண்ணா நகரைச் சோ்ந்தவா் மாணிக்கம் (74). கடந்த இரு தினங்களுக்கு முன்பு இவரிடம், அவரது மகன் சுப்பிரமணியன் (46) வீட்டின் பட்டாவை கேட்டு தகராறு செய்தாா். அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன் மற்றும் அவரது உறவினா்கள் உமா, பரமசிவம், செல்வி, சுதா, சின்னப்பிள்ளை ஆகிய 6 பேரும் சோ்ந்து மாணிக்கத்தைத் திட்டி தாக்கியுள்ளனா். இதில், பலத்த காயமடைந்த மாணிக்கம் அரியலூரிலுள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து புகாரின் பேரில் மாணிக்கத்தை தாக்கிய மேற்கண்ட 6 போ் மீதும் விக்கிரமங்கலம் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com