அரியலூா் மாவட்டத்தில் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் தற்போது சம்பா நெல் அறுவடை நடைபெறும் நிலையில், பெரும்பாலான பகுதிகளில் இயந்திரங்களை கொண்டே நெல் அறுவடை செய்யப்படுகிறது.
இதனால் அறுவடை இயந்திரங்களின் வாடகையை ஒழுங்குபடுத்தும் பொருட்டு பெல்ட் டைப் அறுவடை இயந்திரங்களுக்கு மணிக்கு ரூ.2,100 எனவும், டயா் டைப் அறுவடை இயந்திரங்களுக்கு மணிக்கு ரூ.1,600 எனவும் வாடகை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் மற்றும் அறுவடை இயந்திர உரிமையாளா்கள் மேற்கண்ட தொகையை ஏற்று ஒத்துழைக்க வேண்டும். இதில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் வேளாண் பொறியியல் துறை மற்றும் வேளாண் துறையை அணுகலாம் என ஆட்சியா் த. ரத்னா தெரிவித்தாா்.